இலங்கையிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

இலங்கையிலிருந்து படகு வழியாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நோக்கி வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 175 ஆக உயர்ந்துள்ளது.

இதுவே, கடந்த 2016, 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து படகு மூலம் வெளியேற முயன்றவர்களின் எண்ணிக்கை சராசரியாக 64 ஆக இருந்துள்ளது.

தற்போதைய எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கடற்படையும் விமானப்படையும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு வெளியேறியவர்களில் பெரும்பான்மையானோர் சிலாபம், மட்டக்களப்பு, திருகோணமலை, தேவேந்திரமுனை ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறியர்கள் என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் தெரிவிக்கையில், ஆட்கடத்தல் மற்றும் மக்கள் கடலில் தங்களை உயிரை பணயம் வைத்து பயணிப்பதை தடுக்க இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அரசு ஒரு வலுவான உறவை கொண்டிருப்பதாக அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படை தளபதி கிரெய்க் புரினி குறிப்பிட்டிருந்ததை நினைவூட்டினார்.

நீங்கள் உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளும் இப்பயணத்தின் மூலம் உங்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.

அவுஸ்திரேலியா மிகக் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடித்து வருகவதால், படகு மூலம் சட்டவிரோதமாக பயணிக்கும் எவரும் அவுஸ்திரேலியாவில் வாழவோ அல்லது வேலை செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என இலங்கைப் பயணத்தின் போது அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படை தளபதி கிரெய்க் புரினி எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.