இந்தோனேசிய கடலுக்கு அடியில் ஆளில்லா நீர்மூழ்கி?

இந்தோனேசிய கடலுக்கு அடியில் ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் ஒன்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கடல் பகுதியில் வேறொரு நாட்டின் ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் கண்டறியப்பட்டதை அடுத்து இந்தோனேசிய கடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை முன்வைத்துள்ள இந்தோனேசிய பிரதிநிதிகள் சபையின் துணை சபாநாயகர் Azis Syamsuddin, “வெளிநாடுகளைச் சேர்ந்த எவ்விதமான நீர்மூழ்கி ட்ரோன் மற்றும் நீர்மூழ்கி கப்பலும் நமது கடலில் நமது அரசின் அனுமதியின்றி இருக்கக் கூடாது,” எனக் கூறியுள்ளார்.