இந்தோனேசியாவில் காணாமல் போன ரோஹிங்கியா அகதிகள் எங்கே?

இந்தோனேசியாவின் Lhokseumawe முகாமில் சுமார் 400 ரோஹிங்கியா அகதிகள் தங்கியிருந்த நிலையில், தற்போது வெறும் 112 அகதிகள் எஞ்சியிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், முகாமிலிருந்து காணாமல் போன அகதிகள் மலேசியாவுக்கு கடத்தப்பட்டிருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகின்றது.
“அவர்கள் எங்கே போனார்கள் என எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஏதேனும் ஒரு வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவர்கள் தப்பியிருக்கக்கூடும். அதுவே அவர்களது இலக்கு,” எனக் கூறியிருக்கிறார் ரோஹிங்கியா பணிக்குழுவின் Ridwan Jalil.