இந்தோனேசியாவில் ஆப்கான் அகதி தற்கொலை

இந்தோனேசியாவில் 38 வயது ஆப்கான் அகதியான அப்துல் ஹூசைன் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இம்முடிவு அவர் சாதாரண எடுத்திருக்க வாய்ப்ப்பில்லை எனப்படுகின்றது.

“தாய்நாட்டில் அவரது மனைவியும் குழந்தையும் இருக்கின்றனர். அவர்களை விட்டு நீண்ட காலம் பிரிந்திருப்பது என்பது மிகவும் கடினமானது,” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அவரது நண்பர். அப்துலை போல சுமார் 14 ஆயிரம் அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

போர் சூழலினால் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தோனேசியாவில் 2014ம் ஆண்டு தஞ்சமடைந்த அப்துல் பாதுகாப்பான நாட்டில் மீள்குடியேற்ற வேண்டி பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.