இந்திய பயணத்தை முடித்து மகிந்த நாளை நாடு திரும்புகின்றார்

நான்கு நாட்கள் விஜயமாக இந்தியா சென்றிருக்கும் சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, தனது விஜயத்தை முடித்து நாளை நாடு திரும்புகிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, கடந்த 7ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துகொண்டிருந்ததாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேநேரம், பிரதமர் மகிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் வாரணாசி, சாரநாத் உள்ளிட்ட இடங்களுகு்கு பயணித்திருந்தார்.