இந்திய கைபேசிகளுக்குள் வாட்ஸ் அப் மூலம் ஊடுருவிய இஸ்ரேலிய ஸ்பைவேர்

இஸ்ரேல் ஸ்பைவேர் சொஃப்வேர் மூலம் இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பலர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஆராய்கையில், முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கைபேசிகளின் வாட்ஸ் அப் மூலம் இஸ்ரேலிய ஸ்பைவேர் ஊடுருவியது தெரியவந்துள்ளது. இதனால் முகநூல் இஸ்ரேலிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதன்படி 20 நாடுகளில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த அரசு அதிகாரிகள் வாட்ஸ் அப் சர்வரை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்தியக் குடிமக்களின் தனிப்பட்ட ரகசியங்களைப் பாதுகாக்க அரசு உறுதி கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த நிலையில் கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்.எஸ்.ஓ 1,400 பேரின் கைபேசிகளை் ஹக் செய்யப்பட்டு அவர்களது வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சில முக்கிய நபர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்க்பபட்டதாகவும் தெரிவித்துள்ளது.

பிரபல சமூக ஆர்வலர்கள் வாட்ஸ் அப் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாகவும், யார் யார் தொலைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சத்தீஸ்கரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெல்லாபாட்டியாவின் வழக்கறிஞர் நிகல்சிங் மத்திய அரசிற்கு அனுப்பியுள்ள புகாரில் தனது கைபேசி வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக கூறியிருந்தார். மத்திய அரசும் வாட்ஸ் அப் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.