இந்திய உளவுப் பிரிவினருடன் இணைந்தே செயற்படுகிறோம் – இராணுவத் தளபதி

தமது வலயங்களின் பாதுகாப்பிற்காக தாங்கள் இந்திய உளவுத் துறையினருடன் இணைந்தே செயற்படுவதாக, சிறிலங்காவிற்கான இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மதுறு ஓயா விசேட படைப் பயிற்சிப் பாடசாலையின் 49ஆவது பிரிவுபசார வைபவத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இந்த விசேட பயிற்சிப் பாடசாலை பற்றி கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி, சிறிலங்கா இராணுவத்திற்கு அதிவிசேடமான தைரியமுள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இந்தப் பாடசாலையில் உருவாக்கப்படுகின்றனர் என்றும், யுத்த காலப்பகுதியில் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதுடன், அவர்களின் தலைமைத்துவம் காரணமாக பல வெற்றிகளை பெற்றும் கொடுத்துள்ளனர் என்றும் அவர்  மேலும் தெரிவித்திருந்தார்.