இந்தியா நரகமா? அவுஸ்திரேலிய ஊடகத்தை மன்னிப்புக்கோருமாறு வலியுறுத்தல்

கொடூரமான கோவிட் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான பயணங்களை இடைநிறுத்துவது குறித்து The West Australian ஊடகம் செய்தி வெளியிடுகையில், இந்தியாவை ‘நரகம்’ எனத் தலைப்பிட்டமைக்கு மன்னிப்புக் கோரவேண்டும் என்று Indian Society of Western Australia குறிப்பிட்டு ஊடகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுமார் 80 அமைப்புக்களைச் சேர்ந்த முப்பதினாயிரம் உறுப்பினர்களுக்கு தாய் சங்கமாக விளங்கும், Indian Society of Western Australia அமைப்பு இந்த கடிதத்தினை West Australian ஊடகத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.

இந்தியாவில் தற்போது இடம் பெற்றிருப்பது பாரிய மனிதப்பேரழிவு. இதனைப் புரிந்துகொள்ளாமல் இந்தியாவையும் இந்தியர்களையும் புண்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவது, ஊடக ரீதியாக பொறுப்பற்றத்தனம் மாத்திரமல்லாமல், குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாகும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி –  எஸ்பிஎஸ்