இந்தியாவில்   ஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டோர் தொகை ஒரே நாளில் ஒரு இலட்சத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் அன்றாட பாதிப்பு 3500  ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து இந்தியாவில் முதன்முறையாக அன்றாட தொற்று எண்ணிக்கை என்பது ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 1,03,558 பேருக்கு புதிதாகக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,25,89,067 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் ஒரே நாளில் 478 பேர் கொரோனா தொற்றால் பலியாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.