இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்- இராதாகிருஸ்ணன்

இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய மாகாண சபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மகாணசபை தேர்தல் நடத்தப்படும் என்று கூறுகின்ற போதிலும் அதனை எந்த முறையில் நடத்துவது என்பது அரசாங்கத்திற்கு பெரும் சிக்கலாக உள்ளது. இதற்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்தியாவிற்கு அளித்துள்ள உறுதியை நிறைவேற்றும் வகையிலும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் மகாணசபை விவகாரத்தில் தீர்க்கமானதொரு முடிவை அரசாங்கம் வழங்க வேண்டும். ஆனால் உண்மையில் தேர்தல் நடத்தப்படுமா என உறுதியாக கூற முடியாது. மாகாணசபை தேர்தல் துரிதமாக நடத்தப்பட வேண்டும் என இந்தியா பல சந்தர்ப்பங்களில் அழுத்தம் பிரயோகித்துள்ளது“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.