இது வெளிப்படையான இன அழிப்பு -நாடாளுமன்றில் சிறிதரன் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இந்த சம்பவம் இது வெளிப்படையான இன அழிப்பு என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், இலங்கையில் சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா, குறித்த பகுதியில் அகழ்வாராச்சி நடைபெறவுள்ளது என்றால் அங்கு செல்பவர்கள் ஏன் செங்கற்களை கொண்டு செல்ல  வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.

மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.