இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்?

இங்கிலாந்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரே, நாட்டின் பிரதமர் ஆவார். அதன்படி கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான “பிரெக்ஸிட்“ ஒப்பந்தத்திற்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால், பிரதமர் தெரசாமே, கடந்த மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இதில் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜோன்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெரோமி ஹண்டிற்கும் இடையே நேரடி போட்டி நிலவுகின்றது. கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 இலட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் வாக்குகள் தான் கட்சியின் புதிய தலைவரை தீர்மானிக்க உள்ளது.

இந்த வாக்குச் சீட்டுக்களை திருப்பி அனுப்புவதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிந்தது. இதையடுத்து இன்று   (செவ்வாய்) வாக்குள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். உடனடியாக பிரதமர் தெரசாமே, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார். அதன் பின்னர் புதிய தலைவரை நாட்டின் பிரதமராக அங்கீகிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பார். இதையடுத்து புதிய பிரதமர் பதவியேற்பார்.