சிறீலங்கா மாணவியை கொன்றவருக்கு சிறை!

மெல்பேர்னில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் சிறீலங்கா மாணவி பலியாகக் காரணமாகவிருந்த நபருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Clayton பகுதியில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி இரவு சிக்னலில் பாதசாரிகளுக்கான பச்சை விளக்கெரிந்துகொண்டிருக்கும்போது வீதியை கடந்துகொண்டிருந்த சிறீலங்கா மாணவி நிஷாலி பெரேராவை அந்தப்பகுதியால் வேகமாக வந்துகொண்டிருந்த வாகனம் மோதி தூக்கி எறிந்ததில் நிஷாலி பெரேரா தலையில் ஏற்பட்ட பலத்த அடிகாரணமாக அந்த இடத்திலேயே இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.