ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பு ; ஒரு இஸ்ரேலியர் பலி இருவர் காயம்

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

17 வயதான இஸ்ரேலிய பெண், தனது தந்தை மற்றும் சகோதரருடன் நடைபயணம் மேற்கொண்டபோது, டோலெவ் குடியேற்றத்திற்கு அருகே இக்குண்டு வெடித்துள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன்போது அந்த பெண் கொல்லப்பட்டதுடன் குறித்த பெண்ணின் சகோதரர் மற்றும் தந்தை காயமடைந்தனர்.

ஒரு இராணுவ ஹெலிகாப்டர் காயமடைந்தவர்களை வெளியேற்றியதாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது.

தந்தை சுயநினைவுடன் இருப்பதாகவும்,, அதே நேரத்தில் அவரது மகன் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உலிலதாகவும் கூறப்படுகிறது.

பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக சந்தேகிப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக இஸ்ரேலினால் அதிகளவான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு வரும் பின்னணியில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.