அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் ஒன்றுதிரண்ட அகதிகள்

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர பாதுகாப்பு விசாவிற்குப் பதிலாக தற்காலிக விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் ஈராக், ஈரான், இலங்கை, சூடான், சோமாலியா, மியான்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சில  கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகதிகளுக்காக 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளுக்கு விசா வழங்கப்படுகின்றது. அதுவும் இவர்கள் முக்கிய நகரங்களுக்கு வெளியே வசிக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டதன் பின்னரே இந்த விசா வழங்கப்படும்.

2013ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சி பதவியேற்ற பின்னரே படகு மூலம் வரும் அகதிகளுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது