அவுஸ்திரேலிய கனவுக்கு ‘Goodbye’ சொன்ன தற்காலிக விசாவாசிகள்

ஹங்கேரி நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவில் வாழ வேண்டும் என்ற கனவோடு புலம்பெயர்ந்த கணவன்- மனைவியான Akos Percsy மற்றும் Marina Ang ஆகிய இருவரும் தங்கள் அவுஸ்திரேலியாவுக்கு கனவுக்கு Goodbye சொல்லியுள்ளனர்.

கொரோனா தொற்று சூழலின் மீது தற்காலிக விசாவாசிகளான அவர்களை அவுஸ்திரேலிய அரசு நடத்திய விதம், இம்முடிவுக்கு அவர்களை அழைத்துச் சென்றிருக்கிறது.

இதனால் அவர்கள் தங்களைப் போன்ற புலம்பெயர்ந்தவர்களை பெரிதும் வரவேற்கும் கனடாவுக்கு செல்ல முடிவெடுத்திருக்கின்றனர்.