அமைச்சரவை பரிந்துரைத்து 1ஆண்டு ஆனாலும் விடுதலையில்லை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதற்காக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது.

எனினும்,  இந்தத் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் அமைதி காத்து வருகின்றார். இந்த நிலையில் பேரறிவாளன், நளினி தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கூட ஓராண்டு காலமாக தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், 7பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டு ஆவதை குறிக்கும் வகையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ருவிட்டரில் பதிவு ஒன்றினை செய்துள்ளார்.

அதில்,

அமைச்சரவை பரிந்துரைத்து 1 ஆண்டு.

நிரபராதி, விடுதலை செய்யணும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக் கொண்டும் தாமதமேனோ?

நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீரே. 29 வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்.

என்னுயிர் இருக்கும் போதே கோப்பில் மை படட்டும்

என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ருவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளார்.