இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

இந்திய – சிறிலங்கா கடற்படையினருக்கு இடையிலான SLINEX 2019 கூட்டு கடற்போர்ப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.

இரண்டு நாடுகளின் கடற்படைகளும் ஏழாவது ஆண்டாக இந்த கூட்டு கடற்போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.

விடுதலைப்புலிகளின்படை பலத்தை அழிப்பதற்கு உதவிய இந்தியா அதன் பின்னர் சிறீலங்கா படையினருடன் அதிகளவில் படைத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.