அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் நியமனம்: அரசின் மீது தயாசிறி கடும் அதிருப்தி

தற்போதைய அரசில் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியைக் கேட்டிருந்தபோதிலும் இராஜாங்க அமைச்சர் பதவியே வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்-

“அமைச்சர்களாக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்களின் பெயர்களை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு நான்தான் அனுப்பினேன். அதாவது நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர மற்றும் எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மேலும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய நடைமுறைகளை நான் வரிசைப்படுத்தி அனுப்பி இருந்தேன். எனினும் அதில் ரோஹன லக்ஷ்மன் பியதாசவின் பெயரே பட்டியலில் முதலில் சேர்க்கப்பட்டிருந்தது” என்றார்.