அமெரிக்க CIA கட்டுப்பாட்டில் சூரிச் விமானநிலையம்

உலக பொருளாதார மகாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்சுவிஸின் டாவோஸ் நகருக்கு சேல்லவுள்ளார்.இதன்போது சூரிச் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்தை ​​ அமெரிக்க CIA யினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பர் என அறியமுடிகிறது.

ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கும்இந்த மாநாட்டிற்கு , கல்வியாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற தலைவர்களுடன் பணக்கார, உயர்மட்ட வணிக மற்றும் அரசியல் பிரமுகர்கள் 500 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக வெளிநாட்டு பாதுகாப்பு முகவர்கள் பொதுவாக விமானநிலையத்தின் கட்டுப்பட்டுப் பகுதிகளுக்கு அனுமதிக்கப் படுவதில்லை.இது வழக்கத்திற்கு மாறானது. “இது பொதுவான விதி அல்ல” என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.