அமெரிக்கா தடையை முதலில் எனக்கே விதித்தது: சரத் பொன்சேகா சொல்கின்றார்

அமெரிக்காவினால் முதலாவதாகப் பாதிக்கப்பட்டவன் நானே. அமெரிக்கா எனக்கே முதலில் விஸா வழங்க மறுத்தது. எனக்கு விஸா வழங்கப்படாமை தொடர்பில் எதுவும் பேசாதவர்கள் சவேந்திர சில்வாவுக்குத் தடை வந்தவுடன் முதலைக் கண்ணீர் வடித்தபடி பேசுவது அரசியல் இலாபம் தேடுவதற்கே என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

நாடாளுமன்றத்தில் சபை ஒத்தி வைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இராணுவத் தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது அல்ல. அவருக்கு ஏற்பட்டுள்ள நிலையை நானும் எதிர்க்கின்றேன் என்றும் அவர் கூறினார்.