அமெரிக்காவை புறக்கணியுங்கள் – ஐ.தே.க கோரிக்கை

சிறீலங்காவில் உள்ள சிங்கள மக்கள் அமெரிக்காவுக்கான நுளை அனுமதிக்கு விண்ணப்பம் செய்வதை நிறுத்தி அமெரிக்காவை புறக்கணிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாhளுமன்ற உறுப்பினர் எம் மலிக்கர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு நுளைவு அனுமதி வழங்கப்படும் வரை சிங்களவர்கள் இந்த புறக்கணிக்பை மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் இந்த தடையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நல்லாட்சியை கொண்டுவந்து தீர்வை தரும் என நம்பி அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களின் முகத்தில் ஐ.தே.க கரியை பூசியுள்ளதையே மலிக்கரின் கருத்து பிரதிபலிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.