அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலிகளில் இதுவே மோசமானது-டிரம்ப்

கொரோனா வைரஸ் தாக்குதல் பேர்ள்ஹாபர் தாக்குதலை விட மோசமானது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பான் மேற்கொண்ட விமானதாக்குதல் மற்றும் செப்டம்பர் 11 தாக்குதல்களை விடவும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை மோசமாக தாக்கியுள்ளது என டிரம்ப் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிற்கு தெரிவித்துள்ளார்.

எங்கள் நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலை நாங்கள் கடந்து வந்துள்ளோம்,நாங்கள் சந்தித்ததில்இதுவே மிக மோசமான தாக்குதல் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது ஒருபோதும் நடந்திருக்க கூடாது,ஆரம்பத்திலேயே தடுத்திருக்கப்படவேண்டியது இந்த தாக்குதல்,சீனாவிலேயே இதனை தடுத்து நிறுத்தியிருக்கலாம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் அது இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவை விட கொரோனா வைரசே அமெரிக்காவின் முதல் எதிரி எனவும் டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.