பொலநறுவை பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறீலங்கா இராணுவத்தின் கோப்ரல் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன் 8 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலநறுவை கிரிதல பகுதியில் இன்று (7) காலை வீதியில் இருந்து விலகிய டபிள் கப் வாகனம் தடம்புரண்டதில் இந்த விபந்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். 10 பேர் வாகனத்தில் பயணம் செய்ததாகவும், சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.