அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்துவோரே பௌத்தர்கள் என பெருமைப்படமுடியும் – விக்கிரமபாகு 

சகல சமூகத்தவர்களையும் சமத்துவமானவர்களாக நடத்தினால்  மாத்திரமே பௌத்த தர்ம போதனைகளை  சரிவரக்கடைப்பிடிக்கின்றோம் என்று பெருமையாக கூறிக்கொள்ள  முடியும் என்று நவ சம சமாஜகட்சியின் தலைவர் விக்கிரமபாகு  கருணாரத்ன தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டுமக்கள் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் சமன் என்ற  கொள்கையை மனதில் நிறுத்தினால்  மாத்திரமே முன்னோக்கி செல்ல இயலும். இதனையே  அனைத்து  மதங்களும் போதிக்கின்றன.

நாட்டை பயங்கரவாத்திலிருந்து மீட்க தற்போது கடினமான  பாதையில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சில அரசியல்வாதிகளின் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில்  உள்ளது. இவற்றை கடந்தே நாம் பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.