அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால், கைது செய்யப்படுவர் – கடற்படை கமாண்டர் சூரிய பண்டார

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் நுழையும் தமிழக மீனவரகள் கைது செய்யப்படுவர் என சிறிலங்கா கடற்படை கமாண்டர் சூரிய பண்டார தெரிவித்தார்.

ஜுன் 26 நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4பேரை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்தனர். இது குறித்து கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், இந்தியக் கடற்பகுதியான வங்கக்கடல், பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா கடலில் கடற்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் கைது செய்து சிறையில் அடைத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா கடற்படைக் கமாண்டர் சூரிய பண்டார தெரிவித்தார்.