அதிபர் ட்ரம்ப் காலத்தில் செல்லப்பிராணிகளே இல்லை

அமெரிக்க அதிபர் மாளிகையில் கடந்த 4 ஆண்டுகளாக எந்தவிதமான செல்லப்பிராணிகளும் வளர்க்கப்படாத நிலையில், ஜோ பைடன் குடிபுகும்போது அவருடன் சேர்ந்து அவரின் இரு நாய்களும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

தற்போது அதிபராக இருந்துவரும் டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் அதிபர் மாளிகையில் எந்தவிதமான செல்லப்பிராணிகளும் வளர்க்கப்படவில்லை.

அதிபர் ட்ரம்ப்புக்கு முன் 8 ஆண்டுகள் அதிபராக இருந்த பாரக் ஒபாமா  போர்ச்சுக்கீசிய நாய்களான ‘போ’, ‘சன்னி’ என பெயரிடப்பட்ட இரு நாய்களை வளர்த்தார். ஏறக்குறைய 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் இரு நாய்களும் வளர்ந்தன.

ட்ரம்ப் ஆட்சியில் 4 ஆண்டுகளாக எந்த வளர்ப்புப் பிராணிகளும் இல்லாத நிலையில் தற்போது ஜோ பைடன் ஆட்சியில் மீண்டும் நாய்கள் அதிபர் மாளிகைக்குள் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.