இஸ்ரேலிய படைகளால்  33 குழந்தைகள் உட்பட 149 பாலஸ்தீனியர்கள் படுகொலை

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் கடந்த ஆண்டில் 33 குழந்தைகள் உட்பட 149 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக
புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களில் 112 பேர் (74 சதவீதம்) காசா பகுதியில் கொல்லப்பட்டனர், மற்றும் 37 (33 சதவீதம்) பேர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது.

காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் 69 பேர் இஸ்ரேலிய வான் தாக்குதல்களின் கீழ் உயிரிழந்தனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்ட சம்பவமும் இங்கு பதிவாகியுள்ளது.தாக்குதலில் அவர்களின் வீடு முற்றாக அழிக்கப்பட்டது

15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் எடுத்துச்சென்றன.இத்துடன் இஸ்ரேல் கைப்பற்றி வைத்திருக்கும் பாலஸ்தீனர்களின் உடல்களின் எண்ணிக்கையை 306 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கொடுமைகள் பற்றி ஐநா அமைப்போ,மனிதவுரிமைகள் பேசும் மேற்கத்திய அமைப்புகளோ எதுவும் கண்டுகொள்ளாமல் இருப்பது இவற்றின் நம்பகத் தன்மையை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கி நிற்கிறது.