அமெரிக்க CIA ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதாரர்கள் படுகொலை

ஆப்கானிஸ்தானில் சிஐஏயின் ஆதரவுடன் செயற்படும் புலனாய்வு குழுவொன்றினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதாரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜலாலாபாத்தில் உள்ள சிபாதுல்ல என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்துல் காதர் சித்தீக்,அப்துல் காதீர் பகார் ஜெகான்சீப் ஜாகீல்வால் சபூர் சாஹீல்வால் ஆகிய சகோதரர்களே சிஐஏயின் ஆதரவுடன் இயங்கும் 02 யுனிட்  எனப்படும் புலனாய்வு பிரிவினரால்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடு புகுந்து அவர்களை தாக்கிய  புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றனர் என கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவு வழங்கியவர்கள் மோதலின் போது கொல்லப்பட்டனர் என தெரிவித்திருந்த அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து அதனை வாபஸ் பெற்றுள்ளனர்

கொல்லப்பட்ட சகோதரர்களிற்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதை மறுத்துள்ளதை உறவினர்கள் மறுத்துள்ளனர்.

இந்த கொலைகள் குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் அரசாங்கத்தின் மீதும் படையினர் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைகள் யுத்த குற்றங்களிற்கு சமமானவை என ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் ஒமார் ஜஹில்வால் தெரிவித்துள்ளார்.

இரவு பத்துமணிக்கு வீட்டிற்குள் நுழைந்து தேடுதல் நடவடிக்கைகயை மேற்கொண்ட 02 பிரிவினர்  வீட்டிற்குள் புகுந்து கைகளை கட்டி வீட்டிலிருந்த ஆண்களை விசாரணை செய்த பின்னர் நான்கு சகோதரர்களையும் சுட்டுக்கொன்றனர் இவர்களில் இருவர் அரச ஊழியர்கள் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த படுகொலைகள் குறித்து  கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தேசிய  புலனாய்வு பணியக இயக்குநர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஸ்ரவ் கானி பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ளார்.