மருத்துவமனையில் திருமணம் நடத்திய ஈழத் தமிழர்

லண்டனில் உள்ள மருத்துவரான ஈழத் தமிழர் ஒருவர் தனது திருமணத்தை மருத்துவமனையிலேயே நடத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனது திருமணத்தை இரத்துச் செய்ய வேண்டிய நிலையில் இருந்ததால், ஈழத் தமிழரான மருத்துவர் அண்ணாலன் நவரட்ணம் என்பவர் ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த தாதியான ஜான் ரிப்பிங் என்பவரை லண்டன் சென்.தோமஸ் மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்டார்.