சிறீலங்காவுக்கு மேலும் உதவ இந்தியா ஆர்வம்

சிறீலங்காவில் தனது அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு சிறீலங்கா அரசு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சாவுடன் காணொளி மூலம் கலந்துரையாடிய சிறீலங்காவுக்கான இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பக்லே சிறீலங்கா அரசுடன் இந்தியா ஏற்கனவே மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துதல், புதிய உடன்பாடுகளை மேற்கொள்ளுதல், சிறீலங்கா மாணவர்களுக்கு அதிக புலமைப் பரிசில்களை வழங்குதல் போன்ற விடையங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரச தலைவர் தற்போதைய கொரோனா நெருக்கடியில் மிகச் சிறப்பாக செயற்பட்டதற்கு இந்தியா பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.