ஈராக்கின் இராணுவத் தளங்களிலிருந்து எதிர்வரும் வாரங்களில் அமெரிக்க இராணுவத்தினர் வௌியேறவுள்ளனர்.
Al-Qaim இராணுவத்தளம் உள்ளிட்ட 3 தளங்களிலிருந்து அவர்கள் வௌியேறவுள்ளனர்.
ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் 8 தளங்களின் 3 தளங்களிலிருந்து வௌியேறும் இந்த நடவடிக்கையானது, அந்தநாட்டிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைக்கும் சமிக்ஞையாக நோக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் மற்றும் ஈராக்கிய அரசாங்கத்துடனான பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே அமெரிக்க இராணுவத்தின் இந்த வௌியேறுகை அமைந்துள்ளது.