இலங்கையில் சீரற்ற வானிலை- 20 பேர் உயிரிழப்பு

WhatsApp Image 2021 11 09 at 7.28.55 AM இலங்கையில் சீரற்ற வானிலை- 20 பேர் உயிரிழப்பு

இலங்கையில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

17 மாவட்டங்களைச் சேர்ந்த 62,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18 வீடுகள் முற்றாகவும் 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளிலிருந்து வௌியேறாதவர்கள், காவல்துறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக அதிகாரத்தை பயன்படுத்தி வௌியேற்றப்படுவார்கள் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.