ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளையும் இணைக்கும் பாலம் ஒன்று குண்டுவெடிப்பினால் சேதம்

ரஷ்யா மற்றும் உக்ரைன்  இடையேயான போரின் ஒரு பகுதியாக, அவ்விரு நாடுகளையும் இணைக்கும் பாலம் ஒன்று குண்டுவெடிப்பினால்  சேதமடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரஷ்ய அதிபர் பூடின் உத்தரவிட்டுள்ள நிலையில், சேதமடைந்த பகுதிகளை சரிசெய்யும் பணி உடனடியாக தொடங்கும் என  அந்நாட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014இல் உக்ரைனில் இருந்து கிரைமியாவை ரஷ்யா இணைத்ததன் முக்கிய அடையாளமாகத் திகழும் இந்த பாலம், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டு  திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.