ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு, அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஈரானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்தத் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது.
“இந்தத் தாக்குதல்கள்… எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராகப் பலத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு முரணானவையாகும்,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்படுவது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பு என இந்த விசாரணைக் குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.



