ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு முக்கியஸ்தர்கள் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் ரோரி முங்கோவன் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய இயக்குனர் டேவிட் வில்லியம் மெக்லாக்லான் ஆகியோரே இலங்கை வரவுள்ளனர்

ரோரி முங்கோவன் செப்டெம்பர் மாத தொடக்கத்தில் இலங்கை வரவுள்ளார். David William McLachlan நாளை மறுதினம் செவ்வாய்கிழமை இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோரை ஐ.நா அதிகாரிகள் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.