ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்து வருகின்ற நிலையில் அந்நாட்டில் இருந்து வெளியேறு கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஈரானுடனான எல்லைப் பகுதியில் துருக்கி அரசு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபானின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், அச்சம் உணர்வில் பல ஆப்கானியர்கள் வெளியேறுவதால் அவர்கள் துருக்கியில் தஞ்சமடையக் கூடும் எனக் கூறப்படுகின்றது.