இன்றைய ஆர்ப்பாட்டம் கண்காணிக்கப் படும்-இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

இலங்கையின் அரசமைப்பே நாட்டின் அதி உச்ச சட்டம் என காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மனித உரிமை ஆணைக்குழு  இன்றைய ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

மேலும்  இலங்கையின் அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு  காவல்துறை கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளை  காவல்துறையினர் பயன்படுத்தக்கூடாது என்றும் அது  மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை பெறுமாறு காவல்துறையினர்  தங்களிற்கு சட்டவிரோதமாக கட்டளையை அனுப்பிவைத்துள்ளனர் என தொழிற்சங்கங்கள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் தெரிவித்தமைக்கு பதில் அளிக்கையில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

அத்தோடு  காவல்துறை கட்டளை சட்டத்தின் 77 பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டங்களிற்கு அனுமதியுள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.