எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமர்ப்பிக்கப் பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
நேற்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக் கிடையிலான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இன்று மாலை 5.00 மணியளவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.