தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை இன்று

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று சனிக்கிழமை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவினால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

யாழ். மாட்டீன் வீதியில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகல் 11 மணிக்கு இந்தவெளியீடு இடம்பெறவுள்ளது. இந்த வெளியீட்டின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்றைய தினம் விஞ்ஞாபனம் வெளியிடப்படுவதையடுத்து எதிர்வரும் 26ஆம் திகதி முதல் யாழ்.மாவட்டத் தொகுதி ரீதியிலான பிரசாரக் கூட்டங்களும் ஆரம்பமாகின்றன. இறுதிப் பிரசாரக் கூட்டம் 2ஆம் திகதி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறும்.