த. தே. வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருக்கு பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் காவல்துறை ஊடாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.