இலங்கையில் இருந்து மேலும் மூவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் மூவர் கடல்வழியாக தப்பிச் சென்று தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

மட்டக்களப்பை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்நத மூவர் அகதிகளாக இன்று அதிகாலை தனுஷ்கோடி சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழமுடியாத நிலையேற்பட்டுள்ளதை அடுத்து தனது இரு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளார்.

மட்டக்களப்பை சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்வாறு கட்ல் வழியாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

சிறுமி மற்றும் 4வயது மகனுடன் தாய் ஒருவர் இவ்வாறு கடல் வழியாக தனுஷ்கோடிக்கு தப்பிச் சென்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களை மீட்ட மெரைன் பொலிசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil News