யுத்தத்தின் பின் நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளது -ஜனாதிபதி

யுத்தத்தின் பின்னர் பொருளாதாரம் மாற்றமடையாத காரணத்தினால் நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடவத்தை டொயோட்டா லங்கா நிறுவனத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டுக்குள் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.