முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது ஆண்டு நினைவு நாள் வவுனியாவில் அனுஸ்டிப்பு

முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவு நாள் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மதநாட்டு குழுவின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

வட்டுக்கேட்டை 50 எழுச்சி மாநாட்டின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (5) மாலை (05.06) இடம்பெற்றது. இதன்போது வவுனியா மாவட்டத்தில் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு செயற்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரனின் திருவுருவப்படத்திற்கும் தீபம் ஏற்றியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு குழுவினரும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினரும் கலந்து கொண்டனர்.