ஒன்பதாவது பாராளுமன்றின் 2ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

443 Views

 2ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளதுஒன்பதாவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் இன்றைய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம், இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளதுடன் இதில் முதலாவதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் மஹிந்த மற்றும் ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்டோரின் பிரசன்னம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற சபை அமர்வு ஒத்திவைக்கப்படும்

 

Tamil News

Leave a Reply