யாழ்.பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான பாலசிங்கம் சுஜீவன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூல் ஊடாக முனைகிறார் என பௌத்த மத குரு ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் கூறியதாக தெரிவித்து, பயங்கரவாத தடுப்பு பிரிவு, அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.