மேலும் பத்து இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

மேலும் பத்து இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் உள்ள தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக உள்ளூர் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதால், அவுஸ்திரேலியா அல்லது இந்தியா ஆகிய நாடுகளுக்கு அதிகமான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.