புதுவருடத்துக்கு முன்னைய விடுமுறை நாளொன்றில் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலில் இழுத்துச் செல்லப்பட்டு, கடலில் மூழ்கி தமிழ் இளைஞர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 29 ஆம் திகதி Geelong கடலில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மெல்பன் – Epping பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிபிரகாஸ் செல்வராசா (வயது 29) என்பவர் எனக் கூறப்படுகின்றது.