கோட்டா அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென உயிரிழப்பு

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் திடீரென உயிரிழப்பு

நாட்டை சீரழிவுபாதைக்கு இட்டுச்சென்ற கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கால முகத்திடலில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த போதே குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவும் குறித்த நபர் காலி முகத்திடல் பகுதியில் பாடிக்கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டா அரசை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் இன்று (12) தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamil News