உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு இலங்கை நீதிச்சேவை சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே அமைப்பான இலங்கை நீதிச்சேவை சங்கம், இந்த வயதெல்லை நீடிப்புத் திட்டத்திற்குத் தனது ஏகமனதான எதிர்ப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.



